இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68 ❖
திரும்பி வந்த மான் குட்டி
வித்தைக்குரங்கு
சிவப்புத் துணியிலே மேல்சட்டை, நீலத் துணியிலே கால் சட்டை, பச்சைத் துணியிலே குல்லா-இப்படி வண்ண வண்ண உடையுடன் காட்சியளித்த அந்தக் குரங்கு, கோவிந்தசாமி சொன்னபடி யெல்லாம் செய்யும்.
கோலை நீட்டினால் தாவும், குட்டிக் கரணம் போடும்; மாடு மேய்ப்பவரைப் போலப் பிடரியிலே கோலை வைத்துக் கொண்டு நிற்கும்; தாத்தா