பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 ❖

திரும்பி வந்த மான் குட்டி



வாழைப்பழம் வாங்கி ரங்கனுக்கு அன்போடு ஊட்டி விட்டார். பக்கத்திலே கடலை விற்ற அம்மாளிடம், அரைப்படி கடலை வாங்கி ஆசையாகக் கொடுத்தார். ரங்கன் சாப்பிடுவதைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்.

மறுநாளே கோவிந்தசாமி ரங்கனைத் தனக்குத் தெரிந்த ஒரு தையற்காரரிடம் அழைத்துச் சென்றார். துண்டு துண்டாக வெட்டிப் போட்டிருந்த வண்ண வண்ணத் துணிகளிலே உடை தைத்து ரங்கனுக்குப் போட்டுவிட்டார் அந்தத் தையற்காரர். அழகாக ஒரு குல்லாயும் தைத்துத் தலையிலே மாட்டினார்.

இப்போது ரங்கன் முன்னைவிட அருமையாக வித்தைகளெல்லாம் காட்டுகிறது. கூட்டமும் நிறையக் கூடுகிறது. பணமும் அதிகம் சேருகிறது!