பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

“எல்லாமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் சோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம், வந்தனம்” என அருட்பிரகாச வள்ளலார் இறைவனை நோக்கி வேண்டிய இவ் விண்ணப்பம் வள்ளலார் கண்டுணர்த்திய சமரச சன்மார்க்கத் திருநெறிக்குரிய இலக்கணமாகவும் இலக்கிய மாகவும் அமைந்துள்ளமை உணர்ந்து இன்புறுதற்குரிய தாகும்.