பக்கம்:திருவருட்பா-12.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔3貌 திருவருட்பா இறைவர், 'நமக்கு இருப்பது ஒரு மனை மட்டும் அன்று. பல மனைகள் உண்டு” என்றனர். பல தலங்கள் அவருக்கு இருப்பதகுல் இவ்வாறு கூறினர். மனை என்பதற்கு மனைவி என்று பொருள் கொண்டால், அவர்க்குப் பார்வதி தேவியார் மட்டும் அன்றிக் கங்கை, திருமால் ஆகிய மனேவியர் இருத்த லின், மனே பல வாம்' என்றனர் என்க. தமிழில் ஒன்றுக்கு மேற்பட்டவை பல என்று கூறுதல் மரபு. ஆதலின் இவ்வாறு பல என்று கூறினர். (166)

៥ម៉.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/271&oldid=913530" இலிருந்து மீள்விக்கப்பட்டது