பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 盘&

அவர்கள் கூறியதை எண்ணியோ? அல்லது; வேறு எந்தக் காரணத்தாலோ? உன் உள்ளம் என்மீது இரக்கம் காட்டி வில்லை. இவ்வளவு நான் முறையிட்டும், நீ இரக்கம் கொள்ளவில்லை என்ருல், காட்டிற்கு ஓடி விடுவேன். கடலில் விழ்ந்து விடுவேன்." (எ . து.)

(அ - செ.) கான் - காடு.

(இ.கு.) இது என்பது ஈது என்ருயது நீட்டல் விகாரம். கொல், அசைச் சொல்.

(வி . ரை.) தாம் தாம் எண்ணிய எண்ணங்கள் முற்றுப் பெருதவர்கள் தற்கொலை புரிந்து கொள்வர். இந்தக் கருத் தில்தான் கான் ஒடுவேன்; கடல் விழுவேன்' என்று கூறப்பட்டன. (16)

மின்போலும் செஞ்சடை வித்தக னே ஒளி மேவியசெம் பென்போலும் மேனிஎம் புண்ணிய னே எனப் போற்றிப்பெற்ற தன்போலும் தாய்தந்தை ஆயிரம் பேர்இருந் தாலும்அந்தோ நீன்போலும் அன்புடை யார்எனக் கா:இந்த நீள் நீலத்தே?

(பொ - ரை.) மின்னலைப் போல் விளங்கும் சிவந்த் சடைமுடியுடைய பேரறிவு படைத்த இறைவனே! ஒளி பொருந்திய நல்ல பொன் போலும் திருஉடல் பெற்ற எங்கள் அறக்கடவுளே! ஐயோ! என்னைப் பாதுகாத்துப் பெற்ற தாய் தந்தையர் பல்லாயிரக் கணக்கானவர் இருந்தாலும், இந்தப் பரந்த உலகில் உன்னைப் போலும் அன்புடையார் எனக்கு வேறு யார் உளர்? ஒருவரும் இலர்." (எ . து.)

(அ . செ.) வித்தகன் . பேரறிஞன்,