பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

第4 திருவருட்பா

காத்தனன். குற்றத்தைக் ಅTLDräå QಹTರ್ಣಿ-ಕಿ ಜಿಲಹ குச் சாட்சி சிவபெருமானது கழுத்தே ஆகும். a అవు இக்கண்டம் எல்லாராலும் போற்றப்படுவது. இந்த உண்மை யினைப் புறநானூறு,

கறைமிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே : என்று கூறி விளக்குகிறது. (25)

சூல்படும் மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப் போல்படும் பாடுதல் லோர்செலக் கேட்கும் பொழுதுமணம் வேல்படும் புண்ணில் கலங்கி அந்தோநம் விடையவன்பூங் கால்படும் துளிதம் மேல்படு மோஒரு கால்என்னுமே.

(பொ. ரை.) நன்கு கருக்கொண்ட கருநிற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தான்கு முகங்களே யுடைய பிரம்மனும் என்கினப் போலவே, அவன் திருவருளைப் பெறுதற்குப் பாடு படுகின்றனர் என்று நல்ல பெரியவர்கள் சொல்ல நான் கேட்கும்போது ஐயோ என் உள்ளம் புண் ளிைல் வேல் பட்டதுபோலக் கலக்கம் கொண்டு, நம் இரடப. வாகனளுகிய சிவபெருமானின் தாமரை மலர்போலும் பாதத் தில் பொருந்திய தூசாகிலும் நம்மேல் படுமோ என்று ஒவ்வொரு சமயம் நினைக்கும்." (எ . து.)

(அ . சொ.) சூல் - கருப்பம், விடை - இரடபம், ஒருகால் . ஒருசமயம்.

(இ . கு.) படுமோ என்பதன் ஒகாரம் ஐயம், (வி - ரை.) நன்கு கருத்த மேகத்தைச் சூல்கொண்ட மேகம் என்பது புலவர் கூறும் மரபு. சூல் ஈண்டு நீராகிய கருப்பம். பொறுக்க முடியாத துன்பத்திற்குப் புண்ணில் வேல் துழைவதை உவமை காட்டப்படும். சிறுத்தொண்டர் இடம்