38 திருவருட்பா
சிவதலம். திருமால் ஆமை வடிவில் சிவபெருமானைப் பூசித்த தலம், ஒருநாள் சுந்தார் இங்குப் பகல் உச்சிப் பொழுதில் இறைவனே வணங்க வந்தபோது பசியால் களைப்புற்றிருந்த நிலையைச் சிவபெருமான் அறிந்து ஊரில் சென்று பிச்சை எடுத்துவந்து சுந்தரர் பசியைப் போக்கினர். இவருக்கு விருந்திட்ட இறைவர் மகலமேல் இன்றும் உள்ள னர். இவ்வாறு இறைவன் செய்ததைச் சுந்தரர் வியந்து,
'கச்சேர் அரவொன் றரைவில் அசைத்துக்
கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென் றுச்சம் போதா ஊருர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே'
என்று பாடியுள்ளனர்.
மிேடியிலா மனைகள்தொறும் இரந்திட்டு உழன்றமை' என்பர் சிவப்பிரகாச சுவாமிகள். இந்த வரலாற்றை உளத் தில் கொண்டே, ஒருவர்க்குக் கச்சூரிலே பிச்சைப் சோறு எடுத்துக் கொடுத்தார்' என்று கூறப்பட்டது. இறைவனுக்குப் பூமாலையினும் பாமாலை விருப்பமுடையது. இதனைத் தாயு மானவரும், 'பல் மாலைத் திரள் இருக்கத் தமையுணர்ந்தோர் பாமாலைக்கே நீதான் பட்சம் என்று நன்மாலேயா எடுத்துச் சொன்னுர் நல்லோர்' என்று உணர்த்தியுள்ளனர். இந்த உண்மையே, 'சொல்பூத் தொடுத்தார் ஒரு வர்' என்று கூறப்பட்டது. (28)
நாடிநீன் றேனே நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக் கேர்டிஅன் றேஒரு கோடியின் துத்ருெரு கூறும் அன்றே தேடிநீன் றேடிதைப் போரும் தருவர் நின் சீர்நினைந்துள் பாடிஅந் தோமனம் வாடிநீன் றேன்முகம் பார்த்தருளே.
(பொ - ரை.) இறைவரே !. நான் வாட்டம் கொண்டு உம்மைக் கேட்பது பத்துக்கோடிப் பொருள். அன்று. ஒரு