பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 02 திருவருட் சிந்தனை

உள்ளதைக் கொண்டு தலமாக வளர அருள் செய்க!

இறைவா, நரியைப் பரியாக்கிய நாயகனே! என்ன அற்புதம். ஒன்றுக்கும் உதவாத அழகில்லாத.உபத்திரவம் செய்யக் கூடிய நரிகளைக் குதிரைகளாக்கி நாட்டில் நட மாடச் செய்த வித்தகனே! நீ ஏன் இதைச் செய்தருளினை? மானிட சாதிக்கு ஒரு படிப்பினை தரச் செய்தருளினை

ஆம். இறைவா! நான் என்க்கு நல்ல வேலையாகக் கிடைக்க வேண்டும், கைநிறைய ஊதியம் கிடைக்கவேண் டும், சிக்கல் இல்லாத கலபடிான வேலையாக அமைய வேண்டும். *

சுற்றுப்புறச் சூழ்நிலையெல்லாம் நன்றாக அமைய வேண்டும்’-என்றெல்லாம் எண்ணிக் காத்துக்கொண்டிருக் கிறேன். உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து வளர மனம் இல்லை.

இறைவா, நான் எனக்கு வாய்த்ததை வழிமுறையுடன் சிறப்பாகச் செய்கின்றேனா? இதுதான் வின்ா? எனக்கு வாய்த்த வேலை மோசமான வேலையாக இருக்கலாம். எனக்கு வாய்த்த சூழ் நிலைகள் மோசமாக இருக்கலாம். நான் முயன்றால் எதையும் நல்லதாகச்செய்ய இயலாதா? தின் திருவருள் எனக்குத் துனை செய்யாதா?

இறைவா, அழகை அழகுபடுத்துவதில் என்ன இருக் கிறது! நல்லதை மேலும் நல்லதாக்குவதில் என்ன முயற்சி. வேண்டியிருக்கிற்து.

இனி நான் நல்ல வேலைக்காக கத்திருக்க மாட்டேன்! எந்தப்பணி கிடைத்ததோ அந்தப் பணியை அது எவ்வளவு மோசமான பணியாக இருந்தாலும் முழு ஊக்கத்துடன் செய்து சிறப்படைவேன்: .” ... ... • . . . . . இறைவா, கெட்டதை நல்லத. க்குவதே ஆள்வினை. பயனில்லாததைப் பயன்பாடு உடையதாக்குவதே முயற்சி, இனி என் வாழ்க்கை இங்ானம் அமைய அருள் செய்க: