பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருவருட் சிந்தனை

என் வாழ்க்கையில் காலந்தவறாமையை அருள்க!

இறைவா, இன்று காலை மெல்லிய தண்ணளி மிக்க காற்று வீசிய காட்டின் சூழ்நிலை. இனிய குயில் இசை எழுப்பியது, எழுந்தேன். ஆம், இறைவா, குயிலின் இசையே என்னை எழுப்பியது.

கடிகாரம், நாட்காட்டி இல்லாத இயற்கை, காலம் தவறுவதில்லை. ஏன், இறைவா? காலத்தவற விடுதல் கூடாதா? ஆம், இறைவா! காலந்தவற விடாநிலையே வாழ்நிலை.

காலம் பொன் போன்றது. காலத்தினாற் செய்வதே பயன்பட்ட வாழ்திலை. பொருள் பொருந்திய வாழ்நிலை. இறைவா, எனக்கு அருள் செய்க:

இறைவா, என்னைச் சுற்றி ஒt ஒழுங்குப்பட்ட உலகைக் காண்கிறேன். எங்கும் ஒழுங்கு. முறை பிறழாத நிகழ்வுகள்.

ஆம், இறைவா, என் வாழ்க்கையிலும் , முறை பிறழாத செம்மையும் வந்தமைய வரம் தருக்:

இறைவா, என் வாழ்க்கையில் காலம் தவறாமை அமைய அருள் செய்க: என் வாழ்க்கையில் காலத்தின் அருமையை உணர்ந்து செயலாற்றும் பாங்கினை அருள் செய்க! .

இறைவா காலங் - u அருள் செய்க