பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவருட் சித்தனை

உணர்ச்சி வசப்படுவதிலிருந்து காப்பாற்றுக!

இறைவா, மோனத் தவமிருக்கும் முதல்வனே உணர் வெலாம் கடந்த ஒருவனே! நின் தி.துவருள் போற்றி! போற்றி! இறைவா, என்னைச் சிலர் உணர்ச்சியற்றவன், மரக்கட்டை, என்றெல்லாம் ஏசுகிறார்கள்!

இறைவா, வாழ்க்கைக்கு உணர்ச்சி தேவையா? இறைவா, ஆம் உண்மைதான்! வாழ்க்கைக்கு ஏன் உணர்ச்சி? எதற்காக உணர்ச்சி உணர்ச்சி விலங்கு களுக்கே உரியது!

மானிடர்க்கு ஏன் உணர்ச்சி? அவசியமில்லை! அப்ப டியா, இறைவா? உணர்ச்சி புலால் தொடர்புடையது; புற உலக வயமானது. எளிதில் அழிக்கக்கூடியது, அழியக் கூடியது உணர்ச்சி தன்னை நோக்கியதே. பிறரை நோக் கியதன்று.

இறைவா, என்ன அற்புதம்! உணர்ச்சியைப்பற்றி ஓரா யிரம் உணர்த்தியருளிய தின் கருணைக்கு ஏது கைம்மாறு? இறைவா, நான் இனி உணர்ச்சி வசப்படமாட்டேன்!

உணர்ச்சிக் களங்களை, காரண காரியங்களை ஆராய்ந்தறியும் துறையில் மடைமாற்றம் செய்து பயன் கொள்வேன். -

உணர்ச்சிக்கு எளிதில் ஆளாகும் பொறிகளை ஆளுமை யுடன் தீர்வு காணும் நெறியில் திருப்பி விடுவேன். உணர்ச் சிக்கு எளிதில் இடம் தரும் சுய நலத்தை அடியோடு மாற்றிப் பிறர்நலம் பேணும் பெருநெறியில் சிறந்து நிற்பேன்!

உணர்ச்சிக்கு எளிதில் இடம் கொடுக்கும் தன், முனைப்மை அடியோடு மாற்றுவேன்! இறைவா உணர்ச்சி வசப்படுவதிலிருந்து என்னைக் காப்பாற்று! நான் மனித னாகச் சிறந்து வாழ்ந்திட அருள் செய்க: -