பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



300 திருவருட் சிந்தனை

இறைவா, ஞானப் பேரொளி வழங்கி அருள்க !

இறைவா, ஜோதியே! சுடரே! சூழொளி விளக்கே: நீ அருட்பெருஞ்ஜோதி! ஞானப்பேரொளி! உன்னை அறிவால் அறிதல் இயலாது. பொருளால் அறிதல் இயலாது!

நாளும் புருவ நடுவில் ஒளிச்சுடர் ஏற்றிக் காணின் காணலாம்! உன்னைக் காண, அறிய, அனுபவிக்க ஆயிரம் ஆயிரம் சடங்குகள் செய்கின்றேன்! ஆயினும் நினைக் கண்டறிந்தே னில்லை. - - -

இறைவா, நின்னைக் காண் உள்ளத்தே நோக்க வேண் டும்! ஒருகணம் நோக்கினும் காலும்! இறைவா, அது தானே இயல்வதில்லை! உன் ஞானத்தை அனுபவிகக, கற்ற நூல், ‘அறிவு, கை கொடுப்பதில்லை! நோன்புகளும் துண்ை செய்வதில்லை! , or - . . . . . .

இறைவா, நீயே பற்றுக்கோடு என்ற தெளிவுமிக்க துணிவு தேவை: இறைவா இந்த ஞானத்தைக் கொடு ஒவ் வொன்றாக ஒழிந்து ஒடுங்கும் தவத்தினைத் தந்தருள் செய்க! உயிர்க்கு உயிராக விளங்கும் உன்னை ஒளி விளக்காக் -அறியாம்ை இருளகற்றும் ஞாண் விளக்காக ஏற்றிப் போற்றிட அருள்செய்க!

ஞானத்தினை அருள் செய்க! ஞானத்திற்குரிய பர மோனத்தை அருள் செய்க! மோனத்தின் எல்லையில் ஆன்மாவின் பரபரப்பு அடங்கட்டும்! அறிவின் ஆர்ப் பாட்டங்கள் அடங்கட்டும்! செல்வத்தின் அகந்தைகள் அழியட்டும்: x

என் அகத்தே வளர்ந்துள்ள அகந்தைக் கிழங்கு அகழ்ந் தெடுக்கப்படட்டும்! இறைவா, அருள் செய்க!

ஒளி வழங்கி அருள்க! ஞானப் பேரொளி வழங்கி அருள்க! ஜோதியாக நின்று என் ஆணவக்கட்டை எரித்து அருள்செய்க. என் ஆன்மா, உடல் அனைத்தும் ஒளிமய மாகி நின்றிட அருள் செய்க! r

சூழொளி விளக்காகி என்னைக்காட்டியருள்க சுடரொளி இந்த உலகை காட்டி அருள் செய்க இறைவா ஞானப் பேரொளி வழங்கி அருள் செய்க!

+