பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 29

விருப்பு - வெறுப்புகளை விட்டகல அருள் செய்க!

இறைவா, இரும்பு மனத்தோனை ஈர்த்து ஈர்த்து ஆட்கொண்ட அண்ணலே, நின் கருணைக்குப் போற்றி! போற்றி!! இறைவா, நின்திருவருள் நோக்கும் பூரணமாக என்பால் இல்லை. நான் உனக்குத் தேவையில்லை என்ற திருவுள்ளம் போலும்!

இறைவா, அன்று ஆட்கொண்டருளி உடன் போந்த உண்மையை இந்த வையகம் மறக்குமா? நான் தா ன் மறக்க விடுவேனா? தெருவில் போய் நின்று கொண்டு உன் அடியான் என்று சொல்லியே நினைவூட்டுவேன்.

என் தலைவனே, என் வேண்டுதல் முழுவதையும் அருள்செய்க! காலங்கடத்தாது அருள் செய்க: இறைவா, உன்னால் ஒன்றும் குறையில்லையா? நான் துருப்பிடித்த இரும்பு போல் ஆகிவிட்டேனா? அதனால் உன் ஆற்றல் என்னை ஈர்த்தாள இயலவில்லையா? அதுவும் உண்மை.

துருப்பிடித்த இரும்பைக் காந்தம் ஈர்க்காது. அதுபோல என் மனம் விருப்பு வெறுப்பு இவைகளால் பற்றப்பட்டிருக் கிறது. வெற்றி-தோல்வி, இலாபம்-நட்டம் இவைகளால் நான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளேன். என் மனம் மத்திடை அகப்பட்ட தயிர்போல அலமருகிறது.

நீ காமனைக் கடிந்தவன் அல்லவா? என் காமங்களை யும் கடிந்து ஆளக்கூடாதா? இறைவா, காமனைக் கடிந்தது, காமத்தைக் கடந்தவர்களிடம் க மன் காமத்தைத் தூண்ட முயற்சி செய்ததற்காக! முதலில் இயல்பாகக் காமத்தைக் கடக்க வேண்டாமா? ஆதலால் நீ ஒன்றும் செய்ய இயலாதா? -

இறைவா, விருப்பு-வெறுப்புகளை விட்டகல முயற்சி செய்கிறேன். துணை செய்க: இலாபம்-நட்டம் ஆகியன என்னைப் பாதிக்காமல் தற்காத்துக் கொள்கிறேன். இறைவா, அருள் செய்க!