பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 8

ஒப்புரவுக்கு உதவும் கூட்டு வாழ்க்கையே தேவை!

இறைவா, சூரனைத் தடித்து அருள் செய்த தலைவ: அன்று ஒரு சூரன் இருந்தான். எளிதில் தடிந்தாட் கொண்டனை . இன்றோ, எண்ணற்ற சூதர்கள் இறைவா, ஏன் இந்த அவலம்? ‘'நரன்’ என்ற முனைப்பு அகன்ற பாடில்லை! “ -

நனோ பலவீனமானவன். எனது வெற்றி பொருந் திய வாழ்வுக்குக் கூட்டாளிகள் பல வழங்கப்படுகின்றன:

ஆனால் கூட்டாளிகள் எளிதில் கூடுவதில்லை. கூடுகிறார்கள், கலைகிறார்கள்! ஏன், இறைவா? நான்” என்ற அகந்தையை இழந்த தூய சமூக வாழ்க்கையை அருள் செய்க. -

இறைவா! நான் திணிந்த இருள் வழிப்பட்ட ஆணவத்தின் விளைவு. ஒப்புரவு வாழ்க்கைக்கு உதவும் ‘கூட்டு வாழ்க்கையே எனக்குத் தேவை. . .

‘நான்’ வேண்டாம் என்னுடைய பெயர் சகட்டும். நான் அற்ற நிலையில் தான் திருவடி ஞான்ம் தலைப்படுகிறது. . . . . . . -

திருவடி சூானத்தை எனக்கு அருள்.செய்க! “நான்” ‘எனது’ அற்ற சமுதாயப் பெரு வெளியில் பலரோடும் தட்பும் உறவும் கொண்டு வாழ்ந்திட அருள் செய்க.

இனி, நான் சமூகத்தின் ஓர் உறுப்பு. இதுவே என் விருப்பம். இறைவா, அருள் செய்க. * , : “ ,