பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 45

இறைவா, படையெடு போராட ஞானவாள் அருள்க!

இறைவா, பெருங்கருணையாளனே! இன்று உனது கருணையாட்சியைக் காட்டியருள்க! உனது கருணை: காட்டும் நெறியை நானும் அடியொற்றி நடைபயிலும் பெற்றியை அருள் செய்க! r

இன்று எங்கும் ஞான சூன்யம்': அதனால் படுகொலைகள் நிகழ்கின்றன. கொலை பயிலுதல் வாழ்க்கை

  • -

யனறு. - -

வாளெடுத்தவன் வாளாலேயே மடிவான். இது நியதி: இறைவா, எனக்குக் கருணை பொழியும் இதயத்தினை வழங்கி அருள்க! . . . . . வாழ்க்கையின் பேறாகிய ஞானமே எனக்குத் தேவை. என்னைச் சுற்றி வளைத்து தாக்கும் பொறிகளை, புலன் களை நான் அடக்கியாண்டு வெற்றி புெற வேண்டும்.

நன்றில்-தீதில் நடுக்கமுறும் சவலை மனத்தினை வலிமைப்படுத்திடுதல் வேண்டும். பாசத்தால் மிகுதியும் தாக்குண்டு வழுக்கி விழும் நான் உன்னுடைய கருணையால் எழுந்து, என்றுமே வீழாமல் நடக்க வேண்டும். அருள் செய்க! ஞானத்தின் திருவுருவே! என் வாழ்வு உய்தி பெற அருள் செய்க! w - *

தூய அறிவினனே! என் அறிவை விரிவு செய்து தூய்மை செய்திடுக அறியாமைக் கலப்பில்லா அறிவினைத் தந்தருள் செய்க! . . . - -., - பிறப்பறுக்கும் ஞானத்தினை வழங்கியருள்க! என்னைச் சுற்றியுள்ள.படையொடு போராட எனக்கும் வாள் வேண்டும் படை வேண்டும். - -

நான் விரும்பும் வாள் ஞானவாள்! ஞானமே, இம்மை யில் என்னை வளர்க்கும்; வாழ்விக்கும். ஞானமே, ஞாலத்தை வெல்லும், ஞானமே நின்னைத் தரும், ஞானமே இன்ப அன்பினை வழங்கும். இறைவா அருள் செய்க: