பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. திருவருட் சிந்தனை

என்பிழைகளை பொறுத்து அருள் செய்க!

இறைவன், தேவ, தேவா, நின் திருவடி அடைந்தேன். காப்பாற்றுக! நான் உனக்குத் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்து வருகின்றேன்.

இறைவா, உன்னை நினைந்தே என் ஆவி கழிந்து வருகிறது. நானும் உன்னை இறைஞ்சி வேண்டும் யாவற்றையும் அருளிச் செய்கின்றாய் இல்லை.

இறைவா, என் மனக் கருத்தறிந்து முடிக்கின்றாய் இல்லை! நானும் இன்று நடக்கும், நாளை நடக்கும், நம் இறைவன் அருள் செய்வார் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீயோ அருளிச் செய்கின்றாய் இல்லை.

நானோ சாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டே யிருக்கிறேன்! இப்பிறப்பில் இப்போது அருளிச் செய்யாது போனால் நான் செத்துப் போனபிறகு என்ன செய்யப் போகிறாய்! என்ன செய்து என்ன பயன்?

இறைவா, அடியேனின் விண்ணப்பத்தைத் திருவுள்ளம் பற்றுக! தான் இப்பிறப்பில் அறிந்து செய்த பாவம் ஒன்றும் இல்லை! நான்குணம் பொல்லேன் அல்லேன்! குற்றமும் உடையேன் அல்லேன்!

இறைவா, அப்படியே குற்றங்கள் இருந்தாலும் நின் திருவுள்ளம் குணமாகக் கொள்ளக் கூடாதா? என் பிழை கண்ணம் பொறுத்தாட் கொள்ளக்கூடாதா? 6. .

இறைவா, எனக்கு அருளி உதவி செய்வதற்காக என் பிழைகளைப் பொறுத்து நிறை செய்யக்கூடாதா? என் பிழைகளைப் பொறுத்த ட்கொள்க! இப்போதே ஆட்கொள்க! -

தானிலம் அறிய ஆட்கொண்டருளுக! இன்ப வாழ் வினை அருள்செய்க: நின் திருவருளில் நலம் மிகுந்திடும் $ ...srtjskir... வினை அருள் ?”

g