7.4 திருவரும் சிந்தனை
இறைவா, என் தலைவா! நான் உனக்கே ஆட்பட் டேன்! ஆனால் ஆட்கொண்ட நீ கைவிட்டு விட்டனை! என்னை ஐம்பொறிகளுக்கும் போகத்திற்கும் பொய்க்கும் ஒத்தியாகக் கொடுத்து விட்டனை! நான் என்ன பிழை செய்தேன்: - - -
இப்பிறப்பில் யானறிந்து தீவினை யாதொன்றும் செய்திலேன்! எந்த வினை இங்ானம் வந்து மூண்டது? இறைவா, எந்த வினை வந்து மூண்டால் என்ன? இப் பிறப்பில் நான் என் தீவினைகளை வெற்றி கொண்டிடத் துணிந்து முயற்சி செய்கின்றேன்! அருள் செய்க! -
எய்த்துக் களைத்துப் போகும் போது ஆற்றலாக நின்றருள் செய்திடுக! நான் உனக்கே அடிமை நான் உனக்கே ஏவல் செய்வேன். நான் மண்ணில் வாழ்வார்யாருக் கும் குற்றேவல் செய்ய மாட்டேன்! நான் பொய்யில் கிடக்க மாட்டேன். பொய்யில்லாத மெய்யே என் வாழ்க்கையின் இலட்சியம். - -
இறைவா, நான் பொய்யிலிருந்து விடுதலை பெற்றாலே . அச்சத்திலிருந்து விடுதலை பெற்றுவிடுவேன். இறைவா, நான், அடிமைத்தனத்திலிருந்து மீள அருள் செய்க!
இறைவா, என்னை அடிமைக்கு ஆளாக்கும் ஆசை களிலிருந்து மீட்டு எடுத்தாள்க: இறைவா, ஆசைகளால் விளையும் பொய்யிலிருந்து விடுதலை தருக. பொய்யிலிருந்து மீண்டு அச்சமிலாத பெரு வாழ்வு வாழ அருள் செய்க!
இறைவா, என் வாழ்க்கையில் துன்பமே தலைக் காட்டாத வண்ணம் வாழ்த்திட அருள் செய்க: இன்பமே
என்றும் சூழ்க! இறைவா, அருள் பாலித்திடுக!