பாயிரம்
இ-ள்:- கற்றதனால் ஆய பயன் என் - (மேற்கூறிய எழுத்தினானாகிய சொற்களையெல்லாம்) கற்றதனானாகிய பயன் (வேறு)யாது, வால் அறிவன் நற் றாள் தொழார் எனின் - விளங்கின அறிவினையுடையவன் திருவடியைத் தொழாராயின்? [கொல்- அசை.]
சொல்லினானே பொருள் அறியப்படுமாதலான், அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடு பெறலாகும். "கற்பக் கழிமட மஃகும்" என்றாரு முளர்.
மீண்டும் வணக்கம் கூறிய தெற்றுக் கென்றார்க்கு, கற்றதனால் பயன் இது வென்பதூஉம், வேறு வேறு பயன் இல்லை யென்பதூஉம் கூறிற்று. ௨
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.
இ-ள்:- மலர் மிசை ஏகினான் மாண் அடி சோந்தார் - மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திரு வடியைக் சோந்தவரன்றே, நிலம்மிசை நீடு வாழ்வார் - நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். [சோந்தவரன்றே-சோந்தவரே, அன்று - அசை.]
நிலமென்று பொதுப்படக் கூறியவதனான், இவ்வுலகின்கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும்.
'தொழுதாற் பயன் என்னை' என்றாக்குப் போகம் நுகர்தலும், வீடு பெறுதலும் என்று கூறுவார், முற்படப் போகம் நுகர்வா ரென்று கூறினர். ௩
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
மனக்கவலை மாற்றல் அரிது,
இ ள்:- தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), மனக்கவலை மாற்றல் அரிது-மனத்து உண்டாம் கவலையை மாற்றுதல் அரிது. [நிகர் - ஒப்பு.]