பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- ஒருவற்கு அணி-ஒருவனுக்கு அழகாவது, பணிவுடையன் இன்சொல்லன் ஆதல்-தாழ்ச்சியுடையனாய் இனிய சொற்களைக் கூற வல்லவன் ஆதல்; பிற அல்ல-பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. [மற்று - அசை.]

இது, தாழ்ந்தொழுக வேண்டு மென்பதும், அதனாலாம் பயனும் கூறிற்று. ௨௫௪.

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

இ-ள்:- சிறுமையுள் நீங்கிய இன்சொல்-புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள், இம்மையும் மறுமையும் இன்பம் தரும்-இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

இஃது, இன்சொல்லும் புன்மை யற்றதா யிருத்தல் வேண்டுமென்பதூஉம், அதனால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் சித்திக்கு மென்பதூஉம் கூறிற்று. ௨௫௫.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

இ-ள்:- துன்பு உறும் அவ்வாமை இல்லாகும்-துன்பம் உறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும், யார்மாட்டும் இன்பு உறும் இன்சொல் அவர்க்கு-யாவர் மாட்டும் (கூறும்) இன்பம் உறுவிக்கின்ற இனிய சொல்லை உடையார்க்கு.

இஃது, இன்சொல் இம்மையில் கேடுறாமல் செய்யு மென்றது. ௨௫௬.

யனீன்று நன்றி பயக்கும் பயனீன்று,
பண்பின் தலைப்பிரியாச் சொல்.