பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்-நடுவுநிலையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், குடி பொன்றி குற்றமும் ஆங்கே தரும்-(அதனாலே அவன்) குலமும் கெட்டு அவ்விடத்தே குற்றமும் உண்டாம்.

இது, வெஃகுதல் செய்வார்க்குச் சந்தான நாசம் உண்டா மென்றது. ௩0௭.

றலீனும் எண்ணாது வெஃகின்; விறலீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

இ-ள்:- எண்ணாது வெஃகின் இறல் ஈனும்-விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் (அது அவனுக்குக்) கேட்டைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்-(பிறன் பொருளை) வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத் தரும்.

இது, வெஃகுதல் செய்வார்க்கு உயிர்க்கேடு வரு மென்றது. ௩0௮.

ஃகாமை செல்வத்திற் கியாதெனின், வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

இ-ள்:- செல்வம் அஃகாமைக்கு யாது எனின்-செல்வம் சுருங்காமைக்குக் காரணம் யாதோவெனின், பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை-பிறன் விரும்பும் கைப்பொருளை (த்தான்) வேண்டாமை (என்க).

இது, வெஃகுதல் செய்யா தார்க்குச் செல்வம் அழியா தென்றது. ௩0௯.

றனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.

௧௧௨