பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவாவறுத்தல்

வாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

இ-ள்:- எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்-எல்லா உயிர்களுக்கும் எல்லா நாளும், தவா பிறப்பு ஈனும் வித்து-கெடாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது, அவா என்ப-ஆசை யென்று சொல்லுவர் (நல்லோர்).

இது, அவாவானது துன்பம் தருதலே யன்றிப் பிறப்பைத் தரு மென்றது. ௩௬௩.

ற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார்
அற்றாக அற்ற திலர்.

இ-ள்:- அற்றவர் என்பார் அவா அற்றார்-(பற்று) அற்றவர் என்பார் ஆசையற்றவரே; மற்றையார் அற்றாக அற்றது இலர்-(ஆசையறாது) பற்றினை அறுத்தார் ஆசையற்றார் பற்றற்றது போலப் பற்றற்றது இலர்.

[அற்றாக-அத்தன்மைத்தாக-ஆசையற்றார் பற்றற்றது போல.]

இஃது, ஆசையுள்ள நாளெல்லாம் பற்றற்றவ ராகா ரென்றது. ௩௬௪.

தூஉய்மை என்ப தவாவின்மை; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

இ-ள்:- தூய்மை என்பது அவாவின்மை-(ஒருவர்க்கு) அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அது வாய்மை வேண்ட வரும்-அவ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். [மற்று என்பது அசை.]

௧௩௩