பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- வையகத்து இன்பு உற்றார் சிறப்பு எய்தல் - (இப்பிறப்பின்கண்) உலகத்தில் இன்பமுற்றார் அதன்மேலும் சிறப்பெய்துதல், அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - (முன்பிறப்பின்கண்) பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவின் பயனென்று சொல்லுவர் (ஆன்றார்). [சிறப்பு - வீடு, செலவு - நடை, ஒழுக்கம்.)

இஃது, அன்புடையார் போகம் துய்த்து வீட்டை அடைவ ரென்றது. ௭௭.

ன்பீனும் ஆர்வ முடைமை; அதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

இ-ள்:- அன்பு ஆர்வமுடைமை ஈனும் - அன்பு ஆர்வமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாத சிறப்பு தரும் - அவ்வார்வமுடைமை நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பைத் தரும்.

[ஆர்வம் - தொடர்பிலார் மாட்டும் செல்லும் காதல், நாடாத என்பது ஈறு கெட்டு நின்றது. நட்பு - நட்பினர். ஆராய்தல் இல்லாத- ஆராய்தல் வேண்டாத.]

இஃது, அன்புடையார்க்கு உலகத்தாரெல்லாம் நட்பினரானவ ரென்றது. ௭௮.

றத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

இ-ள்:- அறியார் அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அறியாதார் அன்பானது அறம்செய்வாற்கே சார்பாம் என்பர்; அஃதே மறத்திற்கும் துணை- அன்பே மறம்செய்வாற்கும் துணையாம்.

இஃது, ஒருவன் மறம்செய்தற்கும் அவன் ஒரு பொருளின் மீது கொண்ட அன்பே காரண மென்றது. ௭௯.

ன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

௩0