பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விருந்தோம்பல்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இ-ள்:- செல் விருந்து ஓம்பி - வந்த விருந்தினரைப் போற்றி, வரு விருந்து பார்த்திருப்பான் - வரும் விருந்தினரைப் பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல் விருந்து - வானத்தவர்க்கு நல்ல விருந்தாவன்.

வரவு பார்த்தல் - விருந்தின்றி உண்ணாமை.

இது, விருந்தோம்புவானது மறுமைப் பயன் கூறிற்று. ௮௬.

னைத்துணைத் தென்பதொன் றில்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்,

இ-ள்:- இனை அணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தினர்க்கு அளித்ததனால் ஆகும் பயன்) இன்ன அளவினை உடைத்தென்று சொல்லலாவது ஒன்று இல்லை; வேள்விப்பயன் விருந்தின் துணை துணை - விருந்தோம்பலின் பயன் விருந்தினர் யாதொரு தன்மையை உடையரோ அத்தன்மையின் அளவிற்று.

இது, விருந்தினரை ஓம்புவதன் பயன் விருந்தினரது தகுதியின் அளவிற்றா மென்றது. ௮௭.

ரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர், விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

இ-ள்:- விருந்து ஓம்பி வேள்வி தலைப்படா தார் - விருந்தினரைப் போற்றி உபகாரம் செய்யமாட்டா தார், பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் - வருந்தி (உடம்பொன்றையும்) ஓம்பிப் பொருளற்றோமென்று இரப்பர்.

இது, விருந்தினரை ஓம்பாதார் தம்பொருளை இழந்து இரந்து வருந்துவ ரென்றது. ௮௮.

௩௩

5