இல்லற வியல்
பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்,
இ-ள்:- பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்களும் மெய்யின் நிலைமையை உடையனவாம், புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.
[குற்றம் தீர்ந்த - குற்றம் நீங்கிய - குற்ற மற்ற.]
குற்றமற்ற நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மையோ டொக்கு மென்று இது கூறிற்று. ௯௪.
உள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
இ-ள்:- உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - (ஒருவன்றன்) நெஞ்சினால் பொய்யை நினையாது ஒழுகுவனாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - உலகத்தார் நெஞ்சினு ளெல்லாம் உளனாவன்.
இது, பொய்யை நினையாதவரை எல்லாரும் போற்றுவ ரென்றது. ௯௫.
மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரில் தலை.
இ-ள்:- மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவன்) மனத்தோடேகூட மெய் சொல்லுவனாயின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை - தவத்தோடேகூடத் தானம் செய்வாரில் தலையாவன்.
இது, மனத்தோடு வாய்மைமொழிதல் எல்லா நன்மைகளையும் பயக்கு மென்றது, ௯௬.
பொய்யாமை அன்ன புகழில்லை, பொய்யாமை
எல்லா அறமும் தரும்.
௩௬