பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்,

இ-ள்:- பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்களும் மெய்யின் நிலைமையை உடையனவாம், புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

[குற்றம் தீர்ந்த - குற்றம் நீங்கிய - குற்ற மற்ற.]

குற்றமற்ற நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மையோ டொக்கு மென்று இது கூறிற்று. ௯௪.

ள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

இ-ள்:- உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - (ஒருவன்றன்) நெஞ்சினால் பொய்யை நினையாது ஒழுகுவனாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - உலகத்தார் நெஞ்சினு ளெல்லாம் உளனாவன்.

இது, பொய்யை நினையாதவரை எல்லாரும் போற்றுவ ரென்றது. ௯௫.

னத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரில் தலை.

இ-ள்:- மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவன்) மனத்தோடேகூட மெய் சொல்லுவனாயின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை - தவத்தோடேகூடத் தானம் செய்வாரில் தலையாவன்.

இது, மனத்தோடு வாய்மைமொழிதல் எல்லா நன்மைகளையும் பயக்கு மென்றது, ௯௬.

பொய்யாமை அன்ன புகழில்லை, பொய்யாமை
எல்லா அறமும் தரும்.

௩௬