பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய்மையுடைமை

இ-ள்:- பொய்யாமை அன்ன புகழ் இல்லை- பொய்யாமையால் வரும் (பொய்யாமையை உடைய. என்னும்) புகழோடு ஒத்த புகழ் வேறொன்றும் இல்லை, பொய்யாமை எல்லா அறமும் தரும் - பொய்யாமையானது (அவன் அறியாமல் தானே) எல்லா அறங்களையும் கொடுக்கு மாதலான்.

[பொய்யாமை என்பது அதனால் வரும் புகழுக்காயின்மையால் ஆகுபெயா.]

இது, வாய்மை மற்றை எல்லா அறங்களையும் பயக்கு மென்றது. ௯௭.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று,

இ-ள்:- பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - பொய்யாமைப் பொய்யாமல் செலுத்தவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - பிற அறங்களைச் செய்தல் நன்றாம்.

[செலுத்துதல் - கைக்கொண்டொழுகுதல், செய்யாமை செய்யாமை - செய்யாமையைச் செய்யாமை - செய்தல்.]

இது, பொய்யாமையைக் கடைப்பிடித்தொழுகினல்லது மற்றை அறங்கள் பயன்படா வென்றது. ௯௮.

புறம்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

இ-ள்:- புறம் தூய்மை நீரால் அமையும் - உடம்பின் தூய்மை நீரினாலே அமைந்துவிடும்; அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் - மனத்தின் தூய்மை மெய் சொல்லுதலானே அறியப்படும்.

இது, வாய்மையால் மனத்தூய்மை உண்டாமென்றது. ௯௯.

ல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு,

௩௭