பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்


௧௨-வது.-நடுவு நிலைமை.

நடுவு நிலைமையாவது, நட்டார் மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. . [செய்ந்நன்றி யறிதற் கண்ணும் நடுவு நிலைமையை விடலாகா தென்றதற்காக இவ்வதிகாரம் அதன்பின் கூறப்பட்டது.]

மன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

இ-ள்:- சமன்செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து - சமன்வரை பண்ணி (இரண்டு தலையும்) சீரொத்தால் தூக்கிப்பார்க்கும் நிறைகோல் போல (வீக்கம் தாக்க மற்று) நின்று, ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - தம் நெஞ்சை ஒருவன்பக்கமாகக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகு.

[சமன்வரை - நிறுக்கும் கருவியாகிய வெள்ளிக்கோலின் இரண்டு தலைகளும் சமனாக (ஒக்க) நிற்குமாறு செய்தற்குத் தூக்கும் கயிறு இடப்படும் வரை, வீக்கம் தாக்கம் - உயர்வு தாழ்வு.]

இது, நடுவு நிலைமை வேண்டு மென்றது. ௧௧௧.

சொற்கோட்ட மில்லது செப்பம், ஒருதலையா
உட்கோட்ட மின்மை பெறின்.

இ-ள்:- செப்பம் கோட்டம் இல்லது சொல் - நடுவு நிலைமையாவது கோட்டம் இல்லாததாகிய சொல்லாம், ஒருதலையாக உட்கோட்டம் இன்மை பெறின் - அது கவராது மனக்கோட்டமின்மையோடு கூடுமாயின். [கோட்டம் - கோணுதல், ஒரு தலையாக என்பது ஈறு கெட்டு நின்றது.]

நடுவு நிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம், இரு பொருட் பொதுமொழி கூறுத லென்பதூஉம் இது கூறிற்று.

[இருபொருட் பொதுமொழி - இருவர் கூறும் பொருள்களுக்கும் பொதுவாக நின்று கூறும்மொழி.] ௧௧௨.

௪௨