பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒழுக்கமுடைமை

இ-ள்:- இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் - மிகுந்தாரது வாயினின்று வரும் தீச்சொற்களைப் பொறுக்குமவர், துறந்தாரின் தூய்மை யுடையார் - துறந்தவர்களைப்போலத் தூய்மையுடையார்.

[மிகுந்தார் - நெறியைக்கடந்தார் - பிழை செய்தார். தூய்மையுடையார் - தூய ஒழுக்கத்தை யுடையார்.]

இது, மிகைசெய்தாரைப் பொறுப்பவர் பற்றறத் துறந்தவரோ டொப்ப ரென்றது. ௧௩0.


௧௪-வது.-ஒழுக்க முடைமை,

ஒழுக்கமுடைமையாவது, தத்தம் நிலைக்கு ஏற்ற ஒழுக்கமுடையாரதல், (இது, பொறையுடைமை சார்பாக நிகழ்தலின் அதன்பின் கூறப்பட்டது.]

ரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

இ-ள்:- பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - வருந்திப் போற்றி ஒழுக்கத்தினைக் காக்க, தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (எல்லா அறங்களிலும் நல்லதனைத்) தெரிந்து (அதனையும்) தப்பாமல் ஆராய்ந்து பார்ப்பினும் (தமக்கு) ஒழுக்கமே துணையா மாதலால்.

இஃது, ஒழுக்கத்தைக் காக்க வேண்டு மென்றது. ௧௩௧.

லகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

இ-ள்:- அறிவு இலாதார் பல கற்றும் - அறிவில்லாதவர் பல் நூல்களைக் கற்றாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந் தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்,

ஒழுக்கமாவது உயர்ந்தார் ஒழுகின நெறியில் ஒழுகுதல் என்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத் தென்பதூஉம் இது கூறிற்று. ௧௩௨.

௪௯

7