பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒழுக்கமுடைமை

இ-ள்:- அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்று - மனக்கோட்ட முடையவன் மாட்டு ஆக்கம் (இல்லையானாற்) போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல் - ஒழுக்கம் இல்லா தான்மாட்டு மிகுதி இல்லையாம். [மிகுதி - உயர்ச்சி.]

இஃது, ஒழுக்க மில்லா தானுக்கு உயர்ச்சி இல்லை என்றது. ௧௩௬.

ழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

இ-ள்:- ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தாலே (தாம் முன்னர்) எய்தாத மேம்பாட்டை எய்துவர். இழுக்கத்தின் எய்தா பழி எய்துவர் - ஒழுக்கமின்மையாலே (தமக்கு) அடாத பழியை எய்துவர்.

[எய்தாத என்பது ஈறுகெட்டு நின்றது. .அடாத - தகாத.]

இஃது, ஒழுக்கத்தால் புகழும், ஒழுக்கமின் மையால் இகழும் அடைவ ரென்றது. ௧௩௭.

ன்றிக்கு வித்தாகும். நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

இ-ள்:- நன்றிக்கு நல் ஒழுக்கம் வித்து ஆகும் - முத்திக்கு நல்ல ஒழுக்கம் விதையாகும். தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

என்றும் - இருமையின் கண்ணும்.

நல்லொழுக்கம் இன்பத்தையும் தீயொழுக்கம் துன்பத்தையும் தருமென்று இது கூறிற்று. ௧௩௮.

ழுக்கம் உடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்,

௫௧