பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறனில் விழையாமை

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்.

இ-ள்:- பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிறனுடைய பொருளா யிருப்பவளை விரும்பி ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல்-உலகத்து அறம் பொருள் அறிந்தார்மாட்டு இல்லையாம்.

[அறம்-அறநூல். பொருள்-பொருள்நூல்.]

இது, பிறனில் விழைதல் மறமென்றும் களவென்றும் கூறிற்று. ௧௪௨.

றன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்.

இ-ள்:- அறன்கடை நின்றாரு ளெல்லாம் - காமத்தின் கண்ணே நின்றா ரெல்லா ருள்ளும், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறனொருவன் கடைத்தலைப் பற்றி நின்றவர்களைப் போல் அறியாதார் இல்லை .[கடைத்தலை-தலைவாயில்.]

இது, பிறனில் விழைதல் பெரும்பேதைமை யென்றது. ௧௪௩.

னைத்துணைய ராயினும் என்னாம், தினைத்துணையும்
தேரான் பிறனில் புகில்.

இ-ள்:- எனை துணையர் ஆயினும்- எல்லா அமைதியையும் உடையாாராயினும், தினை துணையும் தேரான் பிறன் இல் புகில்-(அவர்) தினை யளவும் தேராது பிறனுடைய இல்லிலே புகுவாராயின், என் ஆம்-அவர் அமைதி யாதாகும்? (ஒன்றும் இல்லாததாகும்.)

["யாமெய்யாக் கண்டவற்றுள்" என்னும் தொடக்கக் குறளின் கீழ்க் குறிக்கப்பட்ட தொல்காப்பியச் சூத்திர விதிப்படி தேரான் என்னும் ஒருமைப்பெயர் தேரார் என்னும் பன்மைப்பெயர்க் காயிற்று. அமைதி - நிறைவு - நற்குண நிறைவு. தினைத்துணையும் -.சிறிதளவும்.]

௫௩