பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

பிறனில் விழைவால் வரும் குற்றம் கூறுவார், முற்பட எல்லாக் குணமும் அழியமென்று கூறினார். ௧௪௪.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

இ-ள்:- தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்-தம்மைத் தெளிந்தார் இல்லின் கண்ணே தீமையைப் புரிந்து ஒழுகுவார், மன்ற விளிந்தாரின் வேறு அல்லர்-மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.

அவர் அறம் - பொருள் - இன்பம் எய்தாமையின், பிணத்தோடு ஒப்பரென்றார். ௧௪௫.

ளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

இ-ள்:- எளிது என இல் இறப்பான் - (தனக்கு) எளிதென்று நினைத்து (ப் பிறனுடைய) இல்லின் கண்ணே மிகுமவன், எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்- எல்லா நாளும் அழியாத நிற்கும் பழியைப் பெறுவான்.

[மிகுமவன் - மிகை செய்யுமவன் - பிழை செய்யுமவன்.]

இஃது, அவனுக்கு அழியாத பழி உண்டா மென்றது. ௧௪௬.

கைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

இ-ள்:- இல் இறப்பான்கண் - (பிறன்) இல்லின் கண்ணே மிகுவான் மாட்டு, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும் பாவமும் அச்சமும் பழியும் என்னும் நான்கு பொருள்களும் நீங்காவாம்.

இஃது, அவனை விட்டுப் பகையும் பாவமும் அச்சமும் பழியும் நீங்கா வென்றது. ௧௪௭.

௫௪