பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ளாமை

தரும்-கேடு இல்லாத நோயைத் தரும்.

இது, களவு நரகம் புகுத்தும் என்றது. ௧௯௫.

ளவல்ல செய்தாங் கெடுவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

இ-ள்:- அளவு அல்ல செய்து-நேர் அல்லாதன செய்து, ஆங்கு கெடுவார்-அவ்விடத்தே கெடுவார், களவு அல்லாத மற்றைய தேற்றாதவர்-களவல்லாத மற்றை அறங்களைத் தெளியாதவர்.

[ஆங்கு என்பது ஈறு கெட்டு நின்றது. நேர்-நீதி.]

இது, கள்வரை அரசர் கொல்வ ரென்றது. ௧௯௬.

ருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இ-ள்:- அருள் கருதி அன்பு உடையர் ஆதல்-அருளைக் குறித்து உயிர்மீது அன்பு உடையராய் ஒழுகுதல், பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்-பொருளைக் குறித்து (ப்பிறரது) மறவியைப் பார்ப்பார்மாட்டு இல்லை.

இது, கள்வார்க்கு அருளும் அன்பும் இல்லையா மென்றது. ௧௯௭.

ளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

இ-ள்:- களவின் கண் கன்றிய காதல் அவர்-களவின் கண்ணே மிக்க ஆசையை யுடையவர், அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்-நேரின் கண் நின்று ஒழுகுதலைச் செய்ய மாட்டார்.

இது, கள்வார் நேர் செய்யமாட்டா ரென்றது. ௧௯௮.

௭௧