பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- இரத்தலின் மன்ற இன்னாத-இரத்தல்போல மெய்யாக இன்னாவாம், நிரப்பிய தாமே தமியர் உணல்-(தாமே) தேடின உணவைத் தாமே தமியராயிருந்து உண்டல்.

தமியராய்-ஒருவருங் காணாமல். [உணல் என்னும் ஒருமைப் பெயர் இன்னாத என்னும் பன்மைச் சொல்லோடு பொருந்தி நின்றது.]

இது, பிறர்க்கு இடாதார் துன்பம் உழப்ப ரென்றது. ௨௨௭.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

இ-ள்:- பாத்து ஊண் மரீஇயவனை-பகுத்து உண்டலைப் பழகியவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியாகிய பொல்லா நோய் தீண்டுதல் இல்லை.

(ஒருவன் பிறற்கு ஈயாதொழிதல், ஈந்தால் பொருள் குறையும்; அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா.) பகுத்துண்ணப் பசி வாரா தென்று இது கூறிற்று. ௨௨௮.

ற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

இ-ள்:- அற்றார் அழிபசி தீர்த்தல்-பொருளற்றாரது (குணங்களை) அழிக்கும் பசியைப் போக்குக; அஃது ஒருவன் பொருள் வைப்பு உழி பெற்றான்-அதுசெய்தல் ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றது போலாம்.

இது, பகுத்துண்ணப் பொருள் அழியா தென்றது. ௨௨௯.

ற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

௮௨