பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழுடைமை

தம் நோவார்-தம்மை நோவாது, தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?

இது புகழ்பட வாழமாட்டார் இகழப்படுவ ரென்றது. ௨௩௬.

சையென்ப வையகத்தார்க் கெல்லாம், இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

இ-ள்:- இசை என்னும் எச்சம் பெறாவிடின்-புகழாகிய ஒழிபு பெறாவிடின், வையகத்தார்க்கு எல்லாம் வசை என்ப-(அப்பெறாமைதானே) உலகத்தார்க் கெல்லாம் வசையாம் என்று சொல்லுவர் (நல்லோர்).

[ஒழிபு-ஒருவன் இறந்தபின் இறவாது (ஒழியாது) நிற்பது.]

மேல் புகழ் இல்லாதாரை இகழ்ப வென்றார். அவர் குற்றமில்லாராயின் இகழப்படுவாரோ என்றார்க்கு, வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே அமையும் என்று ஈண்டுக் கூறினார். ௨௩௭.

சையொழிய வாழ்வாரே வாழ்வார்; இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

இ-ள்:- வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்-வசை ஒழிய வாழ்வாரே உயிர் வாழ்ந்தாராவார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர்-புகழ் ஓழிய வாழ்வாரே உயிர் வாழாதாராவர்.

இது, புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது. ௨௩௮.

சையிலா வண்பயன் குன்றும், இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

இ-ள்:- இசை இலா யாக்கை பொறுத்த நிலம்-புகழ் இல்லாத உடம்பைப் பொறுத்த நிலத்தின் கண், வசை இலா வண்பயன் குன்றும்-பழியற்ற நல்விளைவு குறையும்.

௮௫