பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

ருட்செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

. இ-ள்:- செல்வத்துள் செல்வம் அருள் செல்வம்-செல்வத்துள் (வைத்துச்) செல்வமாவது அருளுடைமையாகிய செல்வம்; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள-பொருளாகிய செல்வங்கள் கீழாயினார் மாட்டும் உளவாதலால்.

இஃது, அருள் நிலை கூறிற்று. [அருள் நிலை-அருளின் தன்மை.] ௨௪௨.

ருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

இ-ள்:- அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு-அருளைப் பொருந்தின நெஞ்சினை உடையவர்க்கு, இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் இல்லை-இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல் இல்லை,

[இன்னா உலகம்-துன்ப உலகம்-நரகலோகம்.]

இஃது, அருளுடையார் நரகம் புகா ரென்றது. ௨௪௩.

ன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

இ-ள்:- மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு-நிலை பெற்ற உயிர்களை ஓம்பி அருள் ஆள்வார்க்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப-தன் உயிர் அஞ்ச வரும் வினை (வருவது) இல்லை என்று சொல்லுவர் (நல்லோர்).

இஃது, அருளுடையார்க்குத் தீமை வராதென்றது. ௨௪௪.

ல்லல் அருளாள்வார்க் கில்லை; வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

௮௮