பக்கம்:திருவாசகத்தேன்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பணிவேண்டிப் பணிவோம் !


மிழில் உவமை, சிறப்புடைய ஒன்று. ஒன்றை எளிதில் விளக்குவதற்கு உவமையைப் போல் உதவி செய்வது பிறிதொன்றில்லை. மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தில் உள்ள உவண்மகள் பலப்பல. அவையுள் எளிதில் விளங்கும் உவமைகள் மிகுதி. "ஊர் ஆ" "ஊர் நாய்" போன்ற உவமைகள் மிகமிகப் பொருட் செறிவுடைய உவமைகள் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கண்டு அனுபவிப்பவைகளே உவமைகளாகி யுள்ளன.

இறைவன்- சிவன் அம்மையப்பன், நெருப்பும் சூடும் போன்ற்து. அம்மையப்பன் தத்துவம்; பொருளும் ஆற்றலும் (Matter and Energy) போன்றது. பரசிவம் இயங்குநிலையில்- தொழிற்படு நிலையில் சக்தியாகப் பரிணமிக்கிறது. நெருப்பையும் சூட்டையும் பிரிக்க இய்லாதது போல அம்மையையும் அப்பனையும் பிரிக்க இய்லாது. அதனாலேயே மங்கைபாகம் என்ற திருவுருவத்தில்- திருநாடித்தில் வழிபடும் வழக்கம் தோன்றியது; தோன்றி வளர்ந்தது. இறைவன்- சிவன் பெண்பால் உகந்தமையை வினாவாக்கி விடையளிக்கிறது திருவாசகம். திருச்சாழலில்,

தென்பா லுகந்தாடும் தில்லைக்கம் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் கனேடி