பக்கம்:திருவாசகத்தேன்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 141

குற்றம்தான்! தேவர்களே இந்தத் தவற்றினைச் செய்திருக்கிறார்கள். அகந்தையினால்- பதவிப் பித்தால் தேவர்கள் செய்த பிழையெலாம் பொறுத்தருள் செய்தாய்.

இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கண்டு அறிய இயலாத சிவத்தினைக் காண முயன்றனர். அது, 'பழச்சுவை' என்றனர்; 'அமுது' என்றனர் 'அறிதலுக்கு அறிது' என்றனர். 'அறிதலுக்கு எளிது' என்றனர். இங்ஙனம் அமரர்கள் தம்முள் முரண்பட்டு நின்று பேசினர்; விளக்கினர். ஆயினும் சிவம் உயிர்க் குலமெல்லாம் உய்தல் வேண்டி சிலைகளில் எழுந்தருளினன். இது அவன் திருவுரு. இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம், உருவமன்று. இலக்கியங்களில் அகரம் முதலிய நெடுங் கணக்கு இருப்பினும் பயன் படுமாற்றால் இலக்கியம் என்றே போற்றுகின்றோம். இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளை, இரும்பு என்று. கூறுவதில்லை. பயன்படு நிலை கருதி, 'ஒலி பெருக்கி', 'மண்வெட்டி' என்று கூறுவதே மரபு. அதுபோல இறைவன் எழுந்தருளியுள்ள திருவுருவம். சிலையாக இருக்கலாம். ஆயினும் பயன்பாடு வழிபாடு ஆதலால் அது திருவுருவம் அல்ல. இறைவனேதான்!

"திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவன் எனவே கண்டவர்க்கு சிவன் உறைவன் ஆங்கே!"- இது: சாத்திரம் காட்டும் உண்மை. இறைவன் எண்ணற்ற ஆன்மாக்களை ஆட்கொள்ளும் பணிக்காகவே. திருவுருவத்தில் எழுந்தருளுகின்றான். திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் முன்னிலையில் பணிகேட்டு விண்ணப்பித்தலே மரபு. அண்மைக் காலமாக இந்த மரபு அறவே மாறி நுகர்பொருள்களை இரந்து கேட்கும். பழக்கம் தோன்றிவிட்டது. இன்று. நமது சமயப் பிரார்த்தனைகளில் பணிசெய்ய விரும்பும் விண்ணப்பம் அறவே இல்லை. மாணிக்கவாச்கர் திருப்பெருந்துறை. மன்னனிடம் “எது எமைப் பணிகொளுமாறது