பக்கம்:திருவாசகத்தேன்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 149

அப்படியே அங்கீகரித்தாலும் பயன் ஒன்றும் இல்லை. பயன் இல்லாதது மட்டும் அல்ல- தீமையும் விளையும்.

திருக்குறள் ‘புகழ்’ என்று ஓர் அதிகாரம் ஒதுகிறது. “புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” என்பது புறநானூறு.

புகழ் என்பது என்ன? இன்று நாம் கேட்பது, காண்பது புகழல்ல! இன்று விளம்பரத்தைப் புகழ் என்று கருதுகிறார்கள். விளம்பரம் வேறு. புகழ் வேறு. சமுதாயத்தில் பயன்பட வாழ்ந்தோர் இருப்பைதேவையைச் சமூகம் உணர்வதே புகழ். புகழ் வேண்டிப் பெறுவதல்ல. தாமே வரலாற்றுப் போக்கில் வந்தடைவது புகழ்.

இங்ஙணம் பலபட வாழ்க்கைக்குப் புகழ் தேவை என்று கூறினும் புகழை விரும்பாத சான்றோர்களும் இருந்துள்ளனர்; இருக்கின்றனர். அவர்கள் தம் புகழ் கேட்கின் நாணுவர். ஏன்? மாணிக்கவாசகரும்,

“வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்”

என்றார். ஈசனின் புகழே பொருளுடைய புகழ் என்றார்.

புகழ் கேட்டு மகிழ்தல், பழி கேட்டு மனம் கோணுதல் மனிதர் இயல்பன்று. புகழ்படும்போது மகிழ்ந்து கேட்கலாம், பழியை மட்டும் கேட்கக் கூடாதா? மற்றவர் பழித்தலை மனம் கோணாது கேட்க வேண்டும். “யாம் வல்லேம்” என்று மமதை கொள்ளுதல் தகாது. மமன்த இழக்கப்படுதல் வேண்டும். “நான்” கெட்டுப் போக வேண்டும். தாழ்வெனும் தன்மை வேண்டும். அறிவுடை யோம் என்னும் செருக்கும் மயக்கமும் ஆகாது. செருக்கு, அறிவு வளர்ச்சியின் ஊற்றுக்களைத் துார்க்கும்; மூடனாக்கும்; முட்டாளாக்கும்; பேதையாக்கும்; மூர்க்க ாைக்கும். எவ்வகையாலும் செருக்கு ஆகாது; கூடாது.