பக்கம்:திருவாசகத்தேன்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

          சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
              திருப்பெருந்துறையுறை சிவனே
          எந்தையே, ஈசா உடலிடம் கொண்டாய்
              யானிதற் கிலன் ஓர் கைம் மாறே!

என்று பாடுவார். யார் சதுரர்? தமிழால் ஞானம் அடைய முடியும். ஞாலத்தில் உயர்ந்த சிவானுபவத்தைத் தமிழில் பேச முடியும் பாட முடியும்; எழுத முடியும் என்று செய்து காட்டிய சதுரர் சிவபெருமானிடம் அந்தம்ொன்றில்லா ஆனந்தம் பெற்ற மாணிக்கவாசகர் சதுரர் என்றெல்லாம் எண்ண இடமுண்டு. ஆயினும் கோடானு கோடி ஆன்மாக்களை ஆட்கொண்டருள மீண்டும் மீண்டும் மண், சுமக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதில் ஆன்மாக்களை ஆட்கொள்ளத் திருவாசகத்தினைப் பெற்ற சிவபெருமானே சதுரர்!

நாமும் நாளும் திருவாசகம் ஒதி, சதுரப் பாட்டுடன் வாழ முயல்வோம்!