பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. (அகவற் படலம்) மூன்றாவது திருஅண்டப் பகுதி (சிவனது துலகுக்குமத்தை வியந்தது) தில்லை அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பு:அரும் தன்மை, வளப் பெரும்காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில்பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன; இல்நுழை கதிரின்நுண் அணுப் புரையச் சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும், தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய மாப் பேர்ஊழியும், நீக்கமும், நிலையும், சூக்கமொடு, துாலத்துச் சூறைமாருதத்து (10) எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன், முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்கும் கடவுள்; காப்பவை கரப்போன்; கரப்பவை கருதாக் கருத்துடைக்கடவுள் திருத்தகும் 130