பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரு.அண்டப் பகுதி சொல்பதம் கடந்த தொல்லோன் காண்க! சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க! பத்திவலையில் படுவோன் காண்க! ஒருவன் என்னும் ஒருவன் காண்க! விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க! அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க! இணைப்புஅரும் பெருமையில் ஈசன் காண்க! அரியதில் அரிய அரியோன் காண்க! மருவி எப்பொருளும் வளரப்போன் காண்க! நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க! மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க! அந்தமும் ஆதியும் அகன்றோன் கர்ண்க! பந்தமும் விடும் படைப்போன் காண்க! நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க! யாவரும் பெறஉறும் ஈசன் காண்க! தேவரும் அறியாச் சிவனே காண்க! பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க! கண்ணால் யானும் கண்டேன் காண்க! அருள் நனி சுரக்கும் அமுதே காண்க! கருணையின் பெருமை கண்டேன் காண்க! புவனியில் சேவடி தீண்டினன் காண்க! சிவன் என யானும் தேறினன் காண்க! அவன்.எனை ஆட்கொண்டு அருளினன் காண்க! குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளும், தானும், உடனே காண்க! 134 (50) (60)