பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருஅண்டப் பகுதி உருவ, அருள்நீர் ஒட்டா, அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி, மட்டு அவிழ் வெறி மலர்க்குளவாய் கோலி, நிறை அகில் (90) மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி, அருச்சுனை வயலுள் அன்புவித்து இட்டுத், தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க, கரும்பனக் கச்சைக் கடவுள் வாழ்க! அருந்தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க! அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க! நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க! சூர்இரும் துன்பம் துடைப்போன், வாழ்க! (100) எய்தினர்க்கு ஆரமுது அளிப்போன், வாழ்க! கூர்இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க! பேர் அமைத்தோளி காதலன், வாழ்க! எதிலார்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க! காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க! நச்ச அரவு ஆட்டிய நம்பன், போற்றி! பிச்ச எமை ஏற்றிய பெரியோன், போற்றி! நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி! நாற்றிசை நடப்பன நடாஅய்க், கிடப்பன கிடாஅய், o 13B