பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5: 3. சுட்டறுத்தல் விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்கோவே. (29) தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதுஆளும் பாகத்துஎந்தை யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம்ஆர்க்கும் குடிஅல்லோம் யாதும்அஞ்சோம் மேவினோம் அவன்அடியார் அடியாரோடு மேன்மேலும் குடைந்துஆடி ஆடுவோமே (30) 214