பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 - 7. காருனியத்து இரங்கல் இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடு இவ்வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே எம்பிரான் போற்றி வானத்து அவரவர் ஏறு போற்றி கொம்பர்.ஆர் மருங்குல் மங்கை கூற வெள்நீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி ஒருவனே போற்றி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகஎன்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே 250 (66) (67) (68)