பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐநதாவது திருச்சதகம் 9. ஆனந்த பரவசம் (கலி நிலைத்துறை) விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனைவைத்தாய் இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் பிச்சைத்தேவா என் நான் செய்கேன் பேசாயே பேசப்பட்டேன் நின் அடியாரில் திரு நீறே பூசப்பபட்டேன் பூதலரால் உன் அடியான் என்று ஏசப்பட்டேன் இனிப் படுகின்றது அமை யாதால் ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே 266 (81) (82)