பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.9 ஆனந்த பரவசம் புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் சிறவே செய்து வழிவந்து வழுவாது சிவனே நின்தாள் சேர்ந்தாரே (86) தாராய் உடையாய் அடியேற்குஉன் தாள்.இணை அன்பு பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன்யான் ஊர்ஆ மிலைக்க குருட்டுஆ மிலைத் திங்கு உன்தாள்.இணை அன்புக்கு ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே (87) அழுகேன் நின்பால் அன்புஆம் மனம்ஆய் அழல் சேர்ந்த மெழுகே அன்னார் மின்ஆர் பொன்ஆர் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண்டு உன்னைப் பணிகேனே (88) 27O