பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் குதுகுதுப்பு இன்றி நின்று என்குறிப்பே செய்து நின்குறிப்பில் விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரைஆர்ந்து இனிய மதுமதுப் போன்று என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து எதிர்வது எப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே பரம்பரனே நின்பழ அடி யாரொடும் என்படிறு விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென்முயல்கறையின் அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐவாய்அரவம் பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சிப் பொதும்பு உறவே பொதும்பு உறுதிப்போல் புகைந்து எரியப் புலன்தீக்கதுவ வெதும்புறுவேனை விடுதிகண்டாய் விரைஆர் நறவம் ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல்வண்டு அதும்பும் கொழும்தேன் அவிர்சடை வானத்து அடல் அரைசே 31.4 (34) (35) (36)