பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றுஒருத்தி சலமுகத்தால் அவன்சடையில் பாயும்.அது என் ஏ.டீ சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணி.எல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடுஆம் சாழலோ (7) கோலாலம் ஆகிக் குரைகடல்வாய் அன்றுஎழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என் ஏடீ ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ (8) தென்பால் உகந்துஆடும் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காண் எடீ பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண் சாழலோ (9) 440