பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்றாவது திருப்பூவல்லி மாயாவிசயம் நீக்குதல் (தில்லை) (நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா) இணை ஆர் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணை.ஆர் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப்பூவல்லி கொய்யாமோ (s) எந்தைஎந் தாய்சுற்றம் மற்றும்எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேன்.இருந்த பொந்தைப் பரவி நாம்யூவல்லி கொய்யாமோ (2) 452