பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருத்தோள் நோக்கம் எழைத் தொழும்பனேன் எத்தனையோ காலம்எல்லாம் பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ஊழிமுதல் சிந்தாத நல்மணிவந்து என்பிறவித் தாழைப் பறித்தவா தோள்நோக்கம் ஆடாமோ (13) உரைமாண்ட உள்ஒளி உத்தமன்வந்து உளம் புகலும் கரைமாண்ட காமப் பெரும்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்துஒடத் துரை மாண்டவா பாடித் தோள்நோக்கம் ஆடாமோ (14)