பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருப்பொன் ஊசல் கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதுஎழுந்து ஞாலம்மிகப் பரி மேற்கொண்டு நமைஆண்டான் சீலம் திகழும் திருஉத்தர கோசமங்கை மாலுக்கு அரியானை வாய்ஆர நாம்பாடிப் பூலித்து அகம்குழைந்து பொன்ஊசல் ஆடாமோ (8) தெங்குஉலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குஉலவு சோதித் தனிஉருவம் வந்தருளி எங்கள் பிறப்பு:அறுத்திட்டு எம்தரமும் ஆட்கொள்வான் பங்குஉலவு கோதையும் தானும் பணிகொண்ட கொங்குஉலவு கொன்றைச் சடையான் குணம்பாவிப் பொங்குஉலவு பூண்முலையிர் பொன்ஊசல் ஆடாமோ (9) 5IIII