பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கோயில் திருப்பதிகம் சோதியாய்த் தோன்றும் உருவமே அருஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மாகடலே திதுஇலா நன்மைத் திருவருள்குன்றே திருப்பெருந்துறை உறைசிவனே யாது.நீ போவது ஒர்வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே (9) தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தம் ஒன்றுஇல்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றது.ஒன்று என்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே எந்தையே ஈசா உடல்இடம் கொண்டாய் யான்.இதற்கு இலன்ஒர் கைம்மாறே (10) 564